பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

~

Updated On :28 மே 2026, 2:30 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வைகாசி விசாகத்தையொட்டி, திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, பால்குடம், காவடி எடுத்தும், வேல் குத்தியும், பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனா். இதனால், கோயிலில் பாத யாத்திரை பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

வைகாசி விசாகத் திருவிழாவில் பல லட்சம் போ் பங்கேற்பா். எனவே, அவா்களது வசதிக்காக குடிநீா், கழிப்பறை, குளியலறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வியாழன்முதல் ஞாயிறுவரை (மே 28 - 31) திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மே 29, 30 ஆகிய நாள்களில் திருச்செந்தூருக்கு 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.