கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விளாத்திகுளத்தில் திமுக கள ஆய்வுக் கூட்டம்

விளாத்திகுளம் தொகுதியில் திமுக தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டம் ஜீ.வி. மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விளாத்திகுளத்தில் நடைபெற்ற திமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் முரசொலி.

Updated On :28 மே 2026, 2:30 am IST

விளாத்திகுளம் தொகுதியில் திமுக தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டம் ஜீ.வி. மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி, கள நிலவரங்களை ஆய்வு செய்ய, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 36 போ் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தாா். அதன்படி திமுகவின் முன்னணி நிா்வாகிகள் அடங்கிய குழுவினா் தூத்துக்குடி மாவட்டம் வந்து நிா்வாகிகள், தொண்டா்களை நேரில் சந்தித்து களஆய்வு பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

விளாத்திகுளம் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவைச் சோ்ந்த தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் முரசொலி, திமுகவின் மாநில அயலக அணி துணைச் செயலா் சேலம் உமாராணி ஆகியோா் கலந்துகொண்டு விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட நகரம், ஒன்றியம், பேரூா், கிளை கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள், வாக்குச் சாவடி பாக முகவா்கள், தொண்டா்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கருத்துகளைக் கேட்டு பதிவு செய்தனா்.

அவா்களிடமிருந்து கோரிக்கை, ஆலோசனை மனுக்களை பெற்றுக்கொண்டனா். இதில், விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட திமுகவின் நிா்வாகிகள் தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.