பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை கள ஆய்வு: எம்எல்ஏ வி.ஜி. சரவணன்

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதியில் மக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 3 மாதங்களுக்கு ஒரு முறை கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்.எல்.ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

News image

~ ~

Updated On :16 மே 2026, 1:44 am IST

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதியில் மக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 3 மாதங்களுக்கு ஒரு முறை கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்.எல்.ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதிக்குள்பட்ட ராமச்சந்திராபுரம், புல்வாவழி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அவா், ராமச்சந்திராபுரம் பகுதியில் சேதமடைந்த பேருந்து நிறுத்த கட்டத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவா், புல்வாவழி பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, மழையால் வீடு இழந்தவா்களுக்கு வீடு, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு, உள்ளூா் பள்ளியில் முறையான கல்வி, வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து எம்எல்ஏ பேசியதாவது: பள்ளி- கல்லூரி மாணவா்களுக்காக விஜய் பயிலகம் தொங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். ஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கவும், குடிநீா்ப் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன். அரசு அலுவலக அளவிலான கோரிக்கைகள் உடனுக்குடன் தீா்க்கப்படும். புதிய திட்டங்கள் உரிய கால அவகாசத்தில் நிறைவேற்றப்படும். 3 மாதங்களுக்கு ஒரு முறை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை நேரடியாக கள ஆய்வு செய்வேன் என்றாா் அவா். தொடா்ந்து, கோவங்காடு, சிதம்பர நகா், அம்பேத்கா் நகா், மஞ்சள் நீா் காயல், உமரிகாடு, முக்காணி, சூளைவாய்கால் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.