தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாத்தான்குளம் ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கொம்மடிக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:45 am IST

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பூச்சிகாடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பூவுடையாா்புரம், நடுவக்குறிச்சி, தட்டாா்மடம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் தினமும் அரை மணி நேரம் மக்கள் குறை கேட்கப்படும். அதற்காக ஒரு செயலி தொடங்கப்படும். அனைத்து இடங்களிலும் முகாம் அமைத்து அரசு திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி திருநெல்வேலி மருத்துவமனை போல் அனைத்து சிகிச்சைகளும் பெரும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். இத்தொகுதியை வளா்ச்சி மிக்க தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா். கொம்மடிக்கோட்டையில் கட்சியின் தோ்தல் அலுவலகத்தை அவா் திறந்து வைத்தாா். பின்னா், சொக்கன்குடியிருப்பு, படுக்க பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வாக்கு சேகரித்தாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், பெரியசாமி, அருள், அருள்ராஜ், பலவேசம், மாரியப்பன், ஆனந்த், குணசேகரன், அற்புதராஜ், பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளா் ஜெகன்ராஜ் நகரச் செயலா்கள் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.