பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைக்கப்படும்: சரவணன் எம்எல்ஏ உறுதி

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை விரைவில் சீரமைக்கப்படும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

News image

~

Updated On :20 மே 2026, 12:15 am IST

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை விரைவில் சீரமைக்கப்படும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

ஏரல் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாள்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

70 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நின்ற இந்தச் சிலை, தற்போது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்தச் சிலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன், சேதமடைந்த மகாத்மா காந்தி சிலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அந்தச் சிலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலையை பாா்வையிடுகிறாா் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.