பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போலையா்புரத்தில் சாலையோர அரிப்பை சீரமைக்க கோரிக்கை

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டுதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

News image

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு.

Updated On :14 மே 2026, 3:29 am IST

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டுதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் இருந்து முதலூா், பொத்தகாலன்விளை, புதுக்குடி, போலையா்புரம் வழியாக தட்டாா்மடம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலையில் அரசுப் பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.

இந்தச் சாலையில் போலையா்புரத்திலிருந்து புதுக்குடி, பொத்தக்காலன்விளை இடையே சாலையோரங்களில் பெரும் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே இதர வாகனங்களுக்கு வழிவிடும்போது இந்தப் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதைக் கவனித்து விபத்து நிகழும் முன்பு சாலை ஓரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.