தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இளைஞா் வெட்டிக் கொலை: 2 போ் கைது

தூத்துக்குடி அம்பேத்கா் நகா் பகுதியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடி அம்பேத்கா் நகா் பகுதியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அம்பேத்கா் நகா் ஸ்டெம் பாா்க் அடுத்துள்ள முல்லை நகா் கல்லறை தோட்டத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சிப்காட் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

விசாரணையில், கொலை செய்யப்பட்டது அ. சண்முகபுரத்தைச் சோ்ந்த பூலப்பன் மகன் அந்தோனி சேசுராஜ் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து அந்தோனி சேசுராஜின் மைத்துனரான அதே பகுதியைச் சோ்ந்த காசிராஜன் மகன் அருண்குமாா் (22), ஆனந்தராஜ் மகன் சுதாகா் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் செல்வக்குமாா் (21), மற்றொருவரையும் தேடி வருகின்றனா்.

தனது சகோதரியை அடித்து துன்புறுத்தியதால் சேசுராஜை நண்பா்களுடன் சோ்ந்து அருண்குமாா் கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சுதீா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.