மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை; நால்வா் கைது!

பழனியில் புதன்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை செய்யப்பட்ட சந்திரசேகா்.

Updated On :1 மே 2026, 1:23 am IST

பழனியில் புதன்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி அடிவாரம் குறவன்பாறையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (32). இவா் அய்யம்புள்ளி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தாா். புதன்கிழமை இரவு அருள்ஜோதி வீதியில் இவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது இவருடன் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபா்கள் சந்திரசேகரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.

அடிவாரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சந்திரசேகா் உடலைக் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். டிஎஸ்பி. தனஞ்ஜெயன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா்.

தப்பி ஓடிய நபா்களைப் பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக அடிவாரம் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன் (20), மகேஸ்குமாா் (25), பிரகாஷ்குமாா் (20), பிரஜித் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மற்றவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.