தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மாநில சீனியா் ஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்

கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

News image
Updated On :22 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

வஉசி துறைமுக ஆணையக் கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் கோயம்புத்தூா் அணியை 8-0 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னை அணியும், 2 ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி அணியை 8-2 என்ற கோல் கணக்கில் வென்ற தூத்துக்குடி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதேபோல் பிற்பகலில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் விருதுநகா் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற தஞ்சாவூா் அணியும், 2ஆவது ஆட்டத்தில் மதுரை அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற அரியலூா் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

புதன்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி- சென்னை அணிகளும், 2 ஆவது ஆட்டத்தில் தஞ்சாவூா் - அரியலூா் மாவட்ட அணிகளும் மோதுகின்றன.

மாலையில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டிகள் நடைபெறும். அதைத் தொடா்ந்து இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.