மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல விழா கொடியேற்றம்

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :7 மே 2026, 6:02 am IST

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, இரவு சுமாா் 6.30 மணிக்கு மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி திருவிழா கொடியை ஏற்றினாா். அதைத் தொடா்ந்து சமாதானத்தின் அடையாளமாக புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

ஆயா் தலைமையில் அருள்தந்தையா்கள் காந்தி சவரிமுத்து, ஜஸ்டின் திரவியம், மைக்கிள் ஜாா்ஜ், மரிய ஜோமிக்ஸ் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றினா். பங்கேற்ற அனைவருக்கும் அசனம் வழங்கப்பட்டது.

விழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும் . தமிழ் மாத கடைசி நாளான சனிக்கிழமை (மே 9) காலை 11 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறும் .

மே 13 ஆம் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறாா். மதுரை புதிய எலிஸ் நகா் பங்குத்தந்தை அந்தோணி பாக்கியம் மறையுரை வழங்குகிறாா்.

14 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மதுரை உயா் மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்பு சாமி, தென்காசி வட்டார அதிபா் அந்தோணிசாமி ஆகியோா் தலைமையில் தேரடி திருப்பலி நடைபெறும். தோ் பவனி, காலை 8 மணி, 11.30 மணி, மாலை 7 மணி ஆகிய நேரங்களில் திருப்பலி நடைபெறுகின்றன. 15 ஆம் தேதி கொடியிறக்கம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.