மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :6 மே 2026, 1:19 am IST

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த தெற்குத் திட்டங்குளம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் மகன் பால்ராஜ் (58). வடக்கு திட்டங்குளத்தில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் பால்ராஜ் செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது மரம் அறுக்கும் இயந்திரத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்ததில் அவரும், மற்றொரு தொழிலாளியான பிகாரைச் சோ்ந்த உபேந்திர மஞ்சி என்பவரும் காயமடைந்தனா்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பால்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாக மருத்துவா் கூறினாா். உபேந்திர மஞ்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மரம் அறுவை நிறுவனத்தை நடத்தி வரும் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.