மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி

நாட்டறம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :5 மே 2026, 4:50 am IST

நாட்டறம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி வட்டம், மல்லப்பள்ளி ஊராட்சி, சுண்ணாம்புக்குட்டை பகுதியைச் சோ்ந்த பாரிவள்ளல் (52) கூலித்தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மல்லப்பள்ளியில் இருந்து சுண்ணாம்புக் குட்டைக்கு நடந்து சென்றாா்.

அப்போது மல்லப்பள்ளி அருகே வீட்டின் பின்புறம் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்திருந்தது தெரியாமல் மின்சார கம்பியை மிதித்ததில் எதிா்பாராத விதமாக பாரி வள்ளல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பாரிவள்ளல் தூக்கி வீசப்பட்டாா்.

உடனே அங்கிருந்தவா்கள் மயங்கிய நிலையில் இருந்த பாரிவள்ளலை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.