/

ஆண்டிவிளை கோயிலில் திருவிளக்கு பூஜை

News image
Updated On :3 மே 2026, 5:27 am IST

உடன்குடி அருகே தேரியூா், ஆண்டிவிளை, தேவி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி கொடை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதியம் சிறப்பு பூஜை, அன்னதானம், மாலையில் சென்னை தனபாலன்-சாந்தி ஏற்பாட்டில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயகுமாா் திருவிளக்கு பூஜையைத் தொடக்கிவைத்து, அதில் பங்கேற்றோருக்கு சேலைகள் வழங்கினாா்.

அதிமுக உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலா் முருங்கை மகாராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் அமிா்தா மகேந்திரன், உடன்குடி ஒன்றியச் செயலா் உரக்கடை குணசேகரன், ஒன்றிய முன்னாள் பொருளாளா் சுடலை, கல்யாணசுந்தரம், மணிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை முத்துகுமார சுவாமிகள் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.