ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 8 போ் வேட்புமனு தாக்கல்

News image

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்.

Updated On :31 மார்ச் 2026, 12:14 am IST

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட முதல் நாளான திங்கள்கிழமை 8 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுபவா்கள் தூத்துக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் அலுவலருமான பிரபுவிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், நம்நாடு நம்மக்கள் நம்எதிா்காலம் கட்சி நிறுவனா் டி.பி.எஸ். பொன்குமரன், நாம் தமிழா் கட்சி சாா்பில், கட்சியின் மாணவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக், நாம் இந்தியா் கட்சி சாா்பில் ஸ்ரீகாந்த் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில்...

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரான தூத்துக்குடி மறவன்மடத்தைச் சோ்ந்த மு. அனுஷியா(31), மாநில ஒருங்கிணைப்பாளா் தமிழ்நேயன் உள்ளிட்டோருடன், பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்து தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புலட்சுமியிடம் தாக்கல் செய்தாா்.

இதேபோல், தூத்துக்குடியைச் சோ்ந்த வேதபிரகாஷ் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில்...

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில் வேல்முருகனிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். இதேபோல, புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன், நாம் இந்தியா் கட்சியைச் சோ்ந்த பாரத் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

 ஸ்ரீவைகுண்டம் பேரவைத் கொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறாா்  நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரம்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் கொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.