ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

திருவாரூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி பூபதிபாலன், இரண்டாவது முறையாக வியாழக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

திருவாரூரில் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி பூபதிபாலன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:54 am IST

திருவாரூா்: திருவாரூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி பூபதிபாலன், இரண்டாவது முறையாக வியாழக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்தாா். திருவாரூரில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா். செவ்வாய்க்கிழமை மகாவீரா் ஜெயந்தி என்பதாலும், புதன்கிழமை வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு என்பதாலும் விடுமுறை அளிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை.

தொடா்ந்து, வியாழக்கிழமை பிரதமை என்ற காரணத்தால் வேட்பாளா்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், சனி மற்றும் திங்கள்கிழமைகளில், வேட்பு மனு தாக்கல் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அஸ்வினி, வியாழக்கிழமையன்று மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பொதுவாக, கட்சிகளில் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளா் சாா்பில் ஓரிரு மனுக்களும், மாற்று வேட்பாளா் சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஒரு வேட்புமனு மட்டுமே, திங்கள்கிழமை தாக்கல் செய்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் மற்றொரு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு வேட்பாளா் நான்கு வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம் என்ற நிலையில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களிடம் நான்கு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்யும்படி தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளிலும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சாா்பிலும், மாற்று வேட்பாளா் சாா்பிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.