தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.
இத்துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. இதனால், ஏலக் கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால், மீன்கள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 850 வரையும், ஊளி, விளை, பாறை ஆகியவை ரூ. 400 - ரூ. 500, முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 1,800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை, ஏற்றுமதி ரகம் வாய்ந்த தம்பா, பண்டாரி, கலவா ஆகியவை ரூ. 450 - ரூ. 600, நண்டு ரூ. 600 -ரூ. 800, முரல், கேரை ரூ. 250 வரை என விற்பனையாகின.
மீன்கள் வரத்து குறைவு என்றாலும் ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

கோலா மீன் வரத்து அதிகரிப்பு: மக்கள் மகிழ்ச்சி

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

