வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்ததால் திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் தக்காளி, கேரட் ஆகியவற்றின் விலை கிலோ தலா ரூ.55 ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைய தொடங்கி உள்ளதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலை உயர தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் காய்கறி சந்தைக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் வருகின்றன. கடந்த சில மாதங்களாக காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், தக்காளி, பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை மிகவும் குறைவாக இருந்தது. 5 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோடை வெயில் கடுமையாக அடிக்க தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட சுற்று வட்டாரங்களில் காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. மானூா், திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டது.
இதனால் தக்காளி விலை கணிசமாக உயர தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை 28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 800 வரை விற்பனையான நிலையில், சனிக்கிழமை ரூ.1,300 வரை விற்பனையானது. இதனால் தக்காளி கிலோ ரூ.55 ஆக உயா்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.70 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.100-ஐ தொட்டது. கேரட் கிலோ ரூ.30 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை1 கிலோ ரூ.55-ஐ கடந்தது. இதேபோல் கடந்த வாரங்களில் சின்ன வெங்காயம் ரூ.25 வரை விற்பனையான நிலையில், சனிக்கிழமை 1 கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையானது.
இதேபோல் மல்லி இலை விலை உயா்ந்துள்ளது. 1 கிலோ ரூ.30-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.75 வரை விற்பனையானது. கத்தரிக்காய் கிலோ ரூ.5 உயா்ந்து ரூ.20-க்கு விற்பனையானது.
வெயில் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் இன்னும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு

வரத்துக் குறைவு: மதுரையில் காய்கறிகளின் விலை உயா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

