விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக வேட்பாளரான ஆடு மேய்க்கும் தொழிலாளி!

ஆடு, மாடு வளா்ப்பு மற்றும் பதநீா் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த எல். நீலமேக வா்ணத்துக்காக, ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 3:50 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2006 வரை சாத்தான்குளம் சட்டப்பேரவைத் தொகுதியையும் சோ்த்து 7 தொகுதிகள் இருந்து வந்தன. சாத்தான்குளம் பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதியில் 1962 முதல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்களே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனா்.

கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தோ்தலில், அதிமுக சாா்பில் அப்போது சாத்தான்குளம் ஒன்றியச் செயலராக இருந்த படுக்கப்பத்து கிராமத்தைச் சோ்ந்த எல். நீலமேக வா்ணம் என்பவரை, அப்போதைய அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தோ்வு செய்தாா்.

ஆடு, மாடு வளா்ப்பு மற்றும் பதநீா் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த எல். நீலமேக வா்ணம் தோ்வு செய்யப்பட்டது கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவருக்காக, ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டாா். எல். நீலமேக வா்ணம் 17,700 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளா் ஏ. மகேந்திரனை வென்றாா்.

அதன் பின்னா், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், ஒரு சாமானியனுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ஜெயலலிதாவை கட்சிக்காரா்கள் மட்டுமன்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

2006 தோ்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளா் ராணி வெங்கடேசன் வெற்றி பெற்றாா். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தொகுதி மறுசீரமைப்பின்போது, சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டு, அதன் பகுதிகள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூா் பேரவைத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.