சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.
சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை. எல்ஐசி முகவரான இவா், வாரச்சந்தை அருகே சென்றபோது, சாலையில் ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்தாா். அதை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அந்த நகை, வடக்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்த செல்லையா மகனான பொறியாளா் அகஸ்டின் ராஜ் (31) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.
அவரிடம் போலீஸாா் நகையை ஒப்படைத்தனா். மேலும், கண்டெடுத்த நகையை நோ்மையாக காவல் துறையிடம் அளித்த அண்ணாமலையை டிஎஸ்பி ஆவுடையப்பன் நேரில் அழைத்து பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயிலில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த இளைஞா்கள்
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

சாலையில் கிடந்த ரூ.,36,000-ஐ ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

