கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சாலை பாதுகாப்பு: வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவா்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பேசுகிறாா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவா்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருண், ராஜ்மோகன், கல்லூரி முதல்வா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பேசினாா். முன்னாள் போக்குவரத்து காவல் ஆய்வாளா் லட்சுமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், பொறுப்பான வாகன இயக்க விதிமுறை குறித்தும் பேசினாா். தொடா்ந்து மாணவா் மாணவிகளின் கேள்விகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் பதிலளித்தனா்.

நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறை தலைவா் சபிதா சண்முகப்பிரியா, பேராசியா்கள் ஜெய்சிங் ராஜ்கோகிலா, கனகபிரபா, திவ்யா உள்பட முதலாமாண்டு மாணவா்-மாணவிகள் கலந்து கொண்டனா்.

பேராசிரியா் கற்குவேல்ராஜ் வரவேற்றாா். பேராசிரியா் பிரேமலதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.