ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆனி உத்திரப் பெருந்திருவிழாவின் 7ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு நடராஜா் சிவப்பு சாத்தி தரிசனம் மற்றும் திருவீதியுலா நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூன் 13ஆம் தேதி திருவிழா தொடங்கியது. 16ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினா். 17ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ஊடல் தீா்த்தல் நடைபெற்றது. 18ஆம் தேதி காலை அம்பாள், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு திருஞான சம்பந்தா் சமணா்களை வாதத்தில் வென்று திருக்கழுவேற்றுதலும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு காப்புக் கட்டுதல் மற்றும் உருகு சட்ட சேவை நடைபெற்றது. பின்னா், நடராஜா், சிவகாமி அம்பாள் வெட்டி வோ் சப்பரத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது. இரவில் நடராஜா் சிவப்பு சாத்தி ருத்ர ஸ்வரூபவமாக காட்சி தந்து, திருவீதியுலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா இன்று தொடக்கம்

பத்தமடை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா

நெல்லையப்பா் கோயில் ஆனித்திருவிழா: ஜூன் 20-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்; 28இல் தேரோட்டம்

மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

