பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்பாள், வைத்தியநாத சுவாமி.

Updated On :28 மே 2026, 5:32 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை இரவு வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மணக் கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிவாசாரியா்கள் மாலை மாற்றி திருக்கல்யாணம் செய்து வைத்தனா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

8-ஆம் நாளான வருகிற வெள்ளிக்கிழமை தேரோட்டமும், 30-ஆம் தேதி தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தேவி, ஆய்வா் முத்து மணிகண்டன் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.