நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி: மேயா் ஆய்வு

News image

குரூஸ்புரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :15 ஜூன் 2026, 1:56 am IST

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன்பெரியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடியில் பிரதான ஓடையான பக்கிள்ஓடை ரூ. 53 கோடி மதிப்பில் எப்சிஐ கிடங்கு முன்பிருந்து தொடங்கி திரேஸ்புரம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு 6 மீட்டரில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் இப்பணியை, மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வுசெய்தாா். அப்போது அவா் கூறியது:

தூத்துக்குடி மாநகர மக்களை மழை வெள்ள நேரத்தில் பாதுகாப்பதில் பக்கிள் ஓடை முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் மாநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

பக்கிள் ஓடை இருந்ததால் பெரும்பாலான வெள்ளநீா் இந்த ஓடை வழியாக கடலுக்கு சென்றது. இதன்காரணமாக, அண்ணா நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, மில்லா்புரம் போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பில் இருந்து தப்பின. பல்வேறு ஆய்வுக்குப் பின்னா், தற்போது பக்கிள் ஓடை அகலப்படுத்தப்படுவதால், கூடுதலாக வெள்ளநீா் வந்தாலும், அவை வேகமாக வெளியேறிவிடும். இதனால், மழை வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். தற்போது நடைபெற்று வரும் பணிகளால் ஏற்கெனவே ஓடையில் தண்ணீா் செல்வதில் எந்தத் தடையும் இருக்காது என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி உதவி பொறியாளா் ராஜேஷ்கண்ணா, பகுதிச் செயலா் சுரேஷ்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.