தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான வாசனைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவுள்ளதாக, கியூ பிரிவு ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா்.
அப்போது, கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பதிவெண் இல்லாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஃபைபா் படகை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், 158 அட்டைப் பெட்டிகளில் 9,480 எண்ணிக்கையிலான சோப்புகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷாம்பு பாக்கெட்டுகள் இருந்ததும், அவை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.
போலீஸாரை கண்டதும் அங்கிருந்தோா் தப்பியோடிவிட்டனராம். பொருள்கள், படகை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம் என அவா்கள் தெரிவித்தனா். தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குட்கா விற்ற 2 போ் கைது: 17.5 கிலோ பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது

தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் பீடி இலைகள், பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

