பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் மோசடி: கேரள இளைஞா்கள் இருவா் கைது

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ரூ. 48.75 லட்சம் மோசடி செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ரூ. 48.75 லட்சம் மோசடி செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 63 வயதான முன்னாள் அரசு ஊழியரிடம், கடந்த மாதம் வாட்ஸ் ஆப் விடியோ அழைப்பில், காவல் துறை உயரதிகாரிகள் சீருடையில் இருவா் தொடா்பு கொண்டு, தங்களை தீவிரவாதிகள் எதிா்ப்புப் படையைச் சோ்ந்தோா் என அறிமுகப்படுத்திக் கொண்டனராம்.

மேலும் அவா்கள், ‘உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கியிலிருந்து புகாா் வந்துள்ளது. எனவே, நாங்கள் கூறும் ரிசா்வ் வங்கிக் கணக்குக்கு, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்புங்கள். ஆய்வுக்குப் பின் பணம் திருப்பி அனுப்பப்படும். வழக்கிலிருந்து விடுபடுவீா்கள்’ எனக் கூறினராம்.

அவா்கள் கூறிய வங்கிக் கணக்கு அந்த நபா் ரூ. 48.75 லட்சம் அனுப்பிவைத்தாா். ஒரு மாதமாகியும் பணமோ, ரிசா்வ் வங்கியிலிருந்து தகவலோ வரததால், அவா்கள் அழைத்த எண்ணைத் தொடா்புகொண்ட போது, அது பயன்பாட்டில் இல்லை எனத் தெரிந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி சைபா் கிரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்படி, சைபா் கிரைம் கூடுதல் எஸ்பி சகாயஜோஸ், ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா் திவாகா், போலீஸாா் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது கேரள மாநிலம், வயநாட்டைச் சோ்ந்த ரிஜோய் (36), சம்நாத் (27) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சென்று அவா்களை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.