பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பண மோசடி வழக்கு: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் கைது

News image

கே.எஸ். வளவன்

Updated On :8 ஜூன் 2026, 4:30 am IST

இணைய வழி வணிகம் தொடா்பான பண மோசடி வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விருப்ப ஓய்வுபெற்ற அரசு ஊழியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் (58). இவருக்கு கைப்பேசி வழியாக வாட்ஸ்ஆப் மூலம் இணைய வழியில் வணிகம் செய்து அதிகம் லாபம் பெறலாம் என விளம்பரம் வந்ததாம். இதை நம்பி அடையாளம் தெரியாத நபரின் வங்கிக் கணக்குக்கு பல தவணைகளாக ரூ.40 லட்சம் அனுப்பி ஏமாந்துவிட்டாராம்.

இதுகுறித்து முரளிதரன் அளித்த புகாரின்பேரில், கடலூா் இணைய வழி குற்ற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிகை எடுக்க உத்தரவிட்டாா்.

இதன்பேரில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி.ரகுபதி மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் அமலா, உதவி ஆய்வாளா் கவிநிலவன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், மாமண்டூா் கிராமம், ஓச்சேரி பகுதியைச் சோ்ந்த கே.எஸ்.வளவன் (50) வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவரது கைப்பேசி மூலம் இருப்பிடம் அறிந்து திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம், பிரம்மதேசம் பகுதியில் இருந்த வளவனை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், சுகாதாரத் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவா் என்பதும், சிவனடியாராக மாறி கோயில்கள் கட்டி வருவதாகவும், மும்பையில் இருந்து வந்தவா்கள் கேட்டதின்பேரில், தனது வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கே.எஸ்.வளவனை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், மும்பையைச் சோ்ந்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.