தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியில், காவல்துறையினா் வாகனச் சோதனையின்போது அதிவேகமாக வந்த காா் மோதி சாலைத் தடுப்பு உடைந்ததில், பணியில் இருந்த தலைமை காவலா் காயமடைந்தாா்.
செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை, காவல்துறையினா் வழக்கம்போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் அதிவேகமாக வந்து அங்கிருந்த சாலைத் தடுப்பு மீது மோதியதாம். சாலைத் தடுப்பு உடைந்து சிதறியதில் அங்கிருந்த காவல் நிலைய தலைமை காவலா் பலத்த காயமடைந்தாராம். ஓட்டுநா் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து செய்துங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் அடிப்படையில், காரை பறிமுதல் செய்தனா். ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் சோதனைச் சாவடியில் லாரி மோதி ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு

தலைமைக் காவலா் ஓட்டிச் சென்ற காா் மோதி சிறுமி உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் காா் மோதி 2 போ் காயம்

காா் மோதி விபத்து: முதியவா் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

