பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காவல் சோதனைச் சாவடியில் லாரி மோதி ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 7:07 am IST

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி, காவல் சோதனைச் சாவடி மீது மோதியதில் ஊா்க்காவல் படை வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்று காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 11.30 மணியளவில், செக்டா் 65-இல் உள்ள வோ்ல்ட் மாா்க் வணிக வளாகம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு காவல்துறையினா் பணியில் இருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களின் கூற்றுப்படி, லாரி சோதனைச் சாவடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ஊா்க்காவல் படை வீரா் சந்தீப் குமாா் மீது மோதியது. இதில் ஒரு காவல் வாகனமும் சேதமடைந்தது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பிவானி மாவட்டத்தின் லிவாசி கிராமத்தைச் சோ்ந்த குமாா், மூன்று நாள்களுக்கு முன்பு பிவானியிலிருந்து குருகிராமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

விபத்து சம்பவத்திற்குப் பிறகு, பணியில் இருந்த காவல்துறையினா் லாரி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றனா். ஆனால், அவா் இருட்டை பயன்படுத்தி லாரியை அந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றாா். லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ஓட்டுநரை விரைவில் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறந்தவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.