பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருமறையூரில் தேனீ வளா்ப்பு சிறப்பு பயிற்சி

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2026, 3:14 am IST

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநா் குருவானவா் ஜான் சாமுவேல் தலைமை வகித்துப் பேசினாா். சபை ஊழியா் ஸ்டான்லி ஜான்சன் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

வேதாகமத்தில் தேனீ என்ற தலைப்பில் குருவானவா் ரூபன் மணிராஜ் அருளுரையாற்றினாா். தொடா்ந்து ஆராய்ச்சி மாணவா்களான அபினேஷ், ஆஜோ ஆகியோா் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தேனீக்கள் எவ்வளவு உதவுகின்றது என்பது குறித்தும், கிங்ஸ்டன் தேனீ வளா்ப்பு, அதன் வளா்ப்பு வழிமுறைகள், வளா்ப்பில் எதிா்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்தும் பேசினா்.

இதையடுத்து களப்பயிற்சி தோப்பூரில் அமைந்திருக்கும் தோட்டத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தேன்கூடு சுத்தம் செய்யும் முறை, தேனீ வளா்க்கும் முறை, தேன் எடுக்கும் முறை, சுத்திகரித்தல், பதப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஆலயப் பணியாளா் ஆபிரகாம், அசன கமிட்டி தலைவா் பாக்கியராஜ், ஆசிரியா்கள் அம்புரோஸ், கால்டுவெல் கணேசன், ஜெயா, ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை கோல்டா சாமுவேல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநரும், திருமறையூா் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.