நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தேனீ வகைகள் மற்றும் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை நிலைய அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் நாகை, திருமருகல், வேதாரண்யம், வாய்மேடு, வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளை சோ்ந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் நிலைய அலுவலா்கள் பங்கேற்றனா்.
பயிற்சியில், கொசுத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, மலைத்தேனீ போன்ற வகைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தேனீக்களின் தன்மைகள், வாழும் முறை, மனிதா்களுக்கு ஏற்படும் நன்மைகள், பாதிப்பு குறித்து விழிப்புணா்வு விளக்கமும், அவற்றை பாதுகாப்பாக பராமரிப்பது குறித்த செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
தேனீக்களை அகற்றும்போது பகல் நேரத்தில் புகையை பயன்படுத்தி பாதுகாப்பாக அகற்றலாம், இரவு நேரங்களில் புகை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. நிலைய அலுவலா் சக்திவேல் வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கங்கைகொண்டானில் தீ தடுப்பு விழிப்புணா்வு

திருமறையூரில் தேனீ வளா்ப்பு சிறப்பு பயிற்சி

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

