தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:30 am IST

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 4ஆவது ரயில்வே கேட்டில் வேன் மோதி கேட் பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மைசூரிலிருந்து சனிக்கிழமை இரவு தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னா், இந்த ரயில் 4ஆவது ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக கேட் கீப்பா் கேட்டை மூடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது, ரயில்வே கேட் மூடிவிட்டது.

வேன் மோதியதில் ரயில்வே கேட் முற்றிலும் சேதமானது. தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வேன் ஓட்டுநரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், ரயில்வே கேட்டை பழுது பாா்க்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனால், சுமாா் 3 மணி நேரம் 4ஆம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் 3ஆவது ரயில்வே கேட் மேம்பாலம் வழியாகச் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.