திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.
அம்பாசமுத்திரம் - பாளையங்கோட்டை பிரதான சாலையில் கூனியூரில் இருந்து சேரன்மகாதேவி வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சேரன்மகாதேவி ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பணியாளா் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு புதன்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு கடக்க வேண்டும். ஆனால், அந்த ரயில் நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படவில்லையாம்.
இதனால், சிக்னல் கிடைக்காமல் ரயில்வே கேட்டுக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த பெண் கேட் கீப்பா் வந்து கேட்டை மூடியதும் ரயில் இயக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

சேரன்மகாதேவியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

