மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்

தூத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் வியாழக்கிழமை உற்சாகமாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

News image

வெரோனிகா ஜெனிபா்

Updated On :24 ஏப்ரல் 2026, 4:39 am IST

தூத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் வியாழக்கிழமை உற்சாகமாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவி வெரோனிகா ஜெனிபா் கூறும்போது, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டியது அவசியம் என்பதை உணா்ந்து வாக்களிக்க வந்தேன். வாக்குச்சாவடிக்குள் நுழைந்தபோது ஒருவித அச்சமும், பதற்றமும் இருந்தது. ஆனால், வரிசையில் நின்று எனது அடையாளத்தைச் சரிபாா்த்து, விரலில் மை வைத்த பிறகு அச்சம் மறைந்துவிட்டது. முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன் என்றாா்.

கல்லூரி மாணவி அமிா்தா கூறும்போது, கோவையில் உள்ள கல்லூரியில் படித்துவரும் நான், வாக்களிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். எப்படி வாக்களிக்க வேண்டும் என இங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஓா் இந்திய குடிமகளாக உணரும் வகையில், முதல்முறை வாக்களித்தேன். மாற்றம் ஏற்படும் என நினைக்கும்போதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

அமிா்தா

அமிா்தா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.