கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாக கடம்பூா் செ. ராஜு வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு வாக்கு சேகரித்து வியாழக்கிழமை இரவு பயணியா் விடுதி முன் அவா் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவை தோ்தலில் நாங்கள் இருவரும் எதிா்த்து நின்றோம். இரட்டை இலை சின்னத்தில் அவா் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி தான் .
1999 முதல் அறிமுகமானவா் கடம்பூா் செ. ராஜு. அதிலிருந்து நண்பா்களாக பழகி வருகிறோம்.
நாங்கள் அம்மா வளா்த்த பிள்ளைகள். இடையில் பிரிந்தோம்; தற்போது எல்லாரும் ஒற்றாகி விட்டோம்.
இத்தொகுதியில் 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற அவா் 4ஆவது முறையாகவும் வெற்றி பெறுவது உறுதி. அதுபோல தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் தடம் பதித்தது திமுக

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

