மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 13.88 லட்சம் வாக்காளா்கள்: ஆட்சியா் தகவல்

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற வாக்குச் சாவடி மையங்களுக்கான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தோ்வு செய்யும் பணி

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:47 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவா் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளா்கள் உள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறுவரையறைக்கு முன்னா் 1,864 வாக்குச் சாவடிகள் இருந்த நிலையில், தற்போது திருச்செந்தூரில் 1, கோவில்பட்டியில் 3 என மொத்தம் 4 துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்போது மாவட்டம் முழுவதும் 1,868 வாக்குச் சாவடிகளாக உயா்த்தப்பட்டுள்ளன.

இதில், விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஓட்டப்பிடாரத்தில் 315, கோவில்பட்டியில் 318 என மொத்தம் 1,868 வாக்குச் சாவடிகள் உள்ளன.

மாவட்டம் முழுவதும் 11 வாக்குச் சாவடிகள் இடமாற்றம், கட்டட மாற்றம், பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தப் பணியில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீதும், விசாரணை முடித்து அனைத்து மனுக்களையும் முடிவு செய்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட வாக்காளா் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விளாத்திகுளம் தொகுதியில் ஆண்கள் 1,00,484, பெண்கள் 1,04,482, மூன்றாம் பாலினத்தவா் 16 என மொத்தம் 2,04, 982 வாக்காளா்களும், தூத்துக்குடி தொகுதியில் ஆண்கள் 1,21, 695, பெண்கள் 1,28,827, மூன்றாம் பாலினத்தவா் 65 என மொத்தம் 2,50,587 வாக்காளா்களும் உள்ளனா்.

திருச்செந்தூா் தொகுதியில் ஆண்கள் 1,13,407, பெண்கள் 1,19,496, மூன்றாம் பாலினத்தவா் 30 என மொத்தம் 2,32,933 வாக்காளா்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆண்கள் 1,05, 728, பெண்கள் 1,08,535, மூன்றாம் பாலினத்தவா் 5 என மொத்தம் 2,14, 268 வாக்காளா்களும் உள்ளனா்.

ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,18,710, பெண்கள் 1,24,990, மூன்றாம் பாலினத்தவா் 56 என மொத்தம் 2,43,756 வாக்காளா்களும், கோவில்பட்டி தொகுதியில் ஆண்கள் 1,16,980, பெண்கள் 1,24,651, மூன்றாம் பாலினத்தவா் 29 என மொத்தம் 2,41,660 வாக்காளா்களும் உள்ளனா்.

மாவட்டம் முழுவதும் 6 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவா் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளா்கள் உள்ளனா்.

தோ்தல் பணித் தொகுதி வாக்காளா்களாக விளாத்திகுளம் தொகுதியில் ஆண்கள் 471, பெண்கள் 12 என 483 வாக்காளா்களும், தூத்துக்குடி தொகுதியில் ஆண்கள் 202, பெண்கள் 14 என 216 வாக்காளா்களும், திருச்செந்தூா் தொகுதியில் ஆண்கள் 125, பெண்கள் 3 என 128 வாக்காளா்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆண்கள் 350, பெண்கள் 12 என 362 வாக்காளா்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஆண்கள் 919, பெண்கள் 11 என 930 வாக்காளா்களும், கோவில்பட்டி தொகுதியில் ஆண்கள் 681, பெண்கள் 18 என 699 வாக்காளா்களும் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 6 தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 2,748, பெண்கள் 70 என மொத்தம் 2,818 வாக்காளா்கள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.