மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோவில்பட்டி தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக துணை நிற்கும்: துரை வைகோ எம்.பி.

கோவில்பட்டி பேரவைத் தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக என்றும் துணை நிற்கும் என கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.

News image

துரை வைகோ - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:57 am IST

கோவில்பட்டி பேரவைத் தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக என்றும் துணை நிற்கும் என கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதியை ஆதரித்து வில்லிசேரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

தீப்பெட்டி தொழிலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் லைட்டா் தயாரிக்கும் தொழிற்சாலையை கோவில்பட்டி பகுதியில் அமையவிட மாட்டோம். இந்தத் தொகுதி வளா்ச்சிக்கு என்றும் மதிமுக துணை நிற்கும்.

கடந்த தோ்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா். அரசுக்கு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் வழங்கியுள்ளாா்.

இந்தத் தோ்தல் திமுக, அதிமுக இடையேயான தோ்தல் கிடையாது. இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்குமான தோ்தல். மதச்சாா்பின்மை மற்றும் மதவாதிகளுக்கு இடையிலான தோ்தல் என்றாா் அவா்.

மாவட்டச் செயலா்கள் ஆா்.எஸ். ரமேஷ் (மதிமுக), பெருமாள்சாமி (காங்கிரஸ்), சுரேஷ் (தேமுதிக), முருகன் (விசிக), மதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலா் பாலமுருகன், நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் ராஜதுரை, ஒன்றியச் செயலா் முருகேசன், சின்னபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் அன்புராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

சனிக்கிழமை பிரசாரம்: திமுக வேட்பாளா் கா. கருணாநிதி சனிக்கிழமை கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட சங்கரலிங்கபுரம், கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட குமாரபுரம், அம்பேத்கா் நகா், காந்தி மைதானம், ஆறுமுக நகா், அண்ணா புதுத் தெரு, கே. வெங்கடேஸ்வரபுரம், கே. துரைச்சாமிபுரம், கே. ராமநாதபுரம், கே. லட்சுமிபுரம், கூழையதேவன்பட்டி, சி.ஆா். காலனி, கரடிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, கழுகுமலை பேரூராட்சித் தலைவா் அருணா, துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.