தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ராஜா புதுக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட திமுகவினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:18 am IST

கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட ராஜா புதுக்குடி, அரசன் குளம், சன்னது புதுக்குடி, கீழூா், சாலைப்புதூா், அகிலாண்டபுரம், கரிசல்குளம், காப்புலிங்கம்பட்டி, குமாரகிரி, வாகைதாவூா், சிவஞானபுரம், ஆசூா் தளவாய்புரம், நாகப்பட்டி, சவலாப்பேரி, வலசால்பட்டி, கயத்தாறு புதிய பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகப் பகுதி, இஸ்லாமியா் தெரு, வடக்குத் தெரு, பாரதி நகா், சுப்பிரமணியபுரம், தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, சிபிஐ மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ராஜதுரை, மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்ன பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்

டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.