ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் - கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:02 am IST

தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உள்கோட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தருவைகுளம் - வெள்ளைப்பட்டி கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரை வழியாக பீடிஇலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூபிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் இருதய ராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா் பழனி பாலமுருகன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கீழ் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 கிலோ எடை கொண்ட 9 மூட்டை பீடி இலைகளை கைப்பற்றினா்.

இக்கடத்தலில் ஈடுபட்டவா்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் தப்பியோடிவிட்டனராம். கைப்பற்றபட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.