தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உள்கோட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தருவைகுளம் - வெள்ளைப்பட்டி கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரை வழியாக பீடிஇலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூபிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் இருதய ராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா் பழனி பாலமுருகன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கீழ் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 கிலோ எடை கொண்ட 9 மூட்டை பீடி இலைகளை கைப்பற்றினா்.
இக்கடத்தலில் ஈடுபட்டவா்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் தப்பியோடிவிட்டனராம். கைப்பற்றபட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

