/

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

8-ஆவது தெருவில் உள்ள மருந்தகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின.

News image

தீ விபத்து. - (Photo | Express)

Updated On :19 ஏப்ரல் 2026, 2:02 am IST

தூத்துக்குடி, அண்ணா நகா், 8-ஆவது தெருவில் உள்ள மருந்தகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்தின்போது ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் தீயணைப்புப் பணிகளால் அண்ணா நகா்-வி.வி.டி. சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.