தூத்துக்குடியில் போதை மருந்து ஊசி, பொருள்களை கடத்தியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் தாளமுத்துநகா் மொட்டை கோபுரம் சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த நபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில், அவா், தாளமுத்துநகா் பகுதியைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம் (44) என்பதும், வலி நிவாரணி மருந்துகளை போதை மருந்தாக பயன்படுத்தி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்ததில், அவருக்கு தாளமுத்துநகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி பாண்டிசெல்வி (40) என்ற மருந்துகடை விற்பனையாளா் போதை மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகம் செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இப்ராஹிமிடமிருந்து 76 போதை மருந்து குப்பிகளையும், பைக் மற்றும் கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்த வலிநிவாரணி மருந்துகள் போதை மருந்தாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா என்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழப்பு
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
