தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image

உயிரிழப்பு

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

சென்னை கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

கொடுங்கையூா் முத்தமிழ்நகா் 5-வது பிளாக் 135-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருபாகரன் (28). இவா் மனைவி பூஜா. இத் தம்பதிக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாரிமுனையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் கிருபாகரனுக்கு போதைப் பழக்கம் இருந்தது.

கிருபாகரன், கடந்த 5 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்துள்ளாா். இந்நிலையில் வீட்டில் வியாழக்கிழமை தனியாக இருந்த கிருபாகரன் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த மனைவி பூஜா, பக்கத்து வீட்டினா் உதவியுடன் கிருபாகரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கிருபாகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். இதன் ஒரு பகுதியாக கிருபாகரன் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். இச் சோதனையில் கிருபாகரன் பயன்படுத்திய ஊசி,போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிருபாகரன் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தியிருப்பதும், இவ்வாறு பல மாதங்களாக போதைக்காக செய்ததால் கிருபாகரன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதும், சம்பவத்தன்றும் கிருபாகரன் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் உயிரிழந்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.