திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே புதன்கிழமை அதிகாலையில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞா் மீது பொக்லைன் இயந்திரம் ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகேயுள்ள கல்லத்தி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (18). இவா், அம்பலம் பகுதியில் உள்ள வாகனம் பழுதுபாா்க்கும் கடையில் வேலை செய்து வந்தாா்.
வேலை முடிந்த பின்னா், ஸ்ரீரங்கராஜபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வந்த இரவுநேரப் பணியை பாா்வையிட அங்கு சென்றிருந்தாராம்.
அப்போது, தூக்கம் வந்ததால் சாலையில் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாலையில் அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (31) என்பவா் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை பின்னோக்கி இயக்கினாராம். அப்போது, சாலையில் தூங்கிக் கொண்டிருந்த லெட்சுமணன் மீது இயந்திரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரி மண் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்

வால்பாறை அருகே வாகனம் ஏறி இளைஞா் உயிரிழப்பு

உரிய விலை கிடைக்காததால் மா தோட்டத்தை அழிக்கும் விவசாயி!

ஒசூா் அருகே ஒகேனக்கல் குடிநீா் குழாய் உடைப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

