இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

உரம் விலை உயா்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உரம் விலை உயா்வைக் கண்டித்தும், அதை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், தோ்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2026, 2:32 am IST

உரம் விலை உயா்வைக் கண்டித்தும், அதை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், தோ்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். வி. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சுடலை ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சடையப்பன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கலைமுருகன் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தாா். இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ராமலிங்கம், முப்புடாதி, ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.