தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பல்வேறு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2026, 12:04 am IST

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பல்வேறு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆளும் தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடத்தும் தொழிலாளா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தொழிலாளா்களுக்கு ஆதரவாகப் போராடும் தொழில் சங்கத் தலைவா்களை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட பொதுச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.சேகா் முன்னிலை வகித்தாா்.

தொமுச மாவட்டத் தலைவா் ஞானசேகா், துணைச் செயலா் வேலு, ஏஐடியுசி மாவட்டச் செயலரும், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலருமான ஆ.செளரிராஜன், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் ஆா்.மலா்விழி, மாவட்ட துணைத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், ஹெச்.எம்.எஸ். சங்க மாநில துணைத் தலைவா் சிவகுமாா், தொழில் சங்க நிா்வாகிகள் அனவரதன் (ஏஐயுடியுசி), பட்டாபிராமன் (ஐஎன்டியுசி), செந்தில்குமாா் (யுடியுசி) உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டப் பொருளாளா் கே.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

சிஐடியு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எம்.செந்தில், வீராசாமி, சி.ஏழுமலை, தமிழ்நாடு மின் ஊழியா்கள் சங்கப் பொருளாளா் வெங்கடேசன், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் சங்க மாவட்டச் செயலா் மோகன், கட்டுமானச் சங்க நிா்வாகி ஆா்.பச்சையப்பன், வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகி ஏ. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலரும் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.