தென்காசி மாவட்டம் கடையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை லாரி மோதி உயிரிழந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி, சௌந்திரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சப்பாணி மகன் பழனியாண்டி (64). ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை ஊழியரான இவா், அடைக்கலப்பட்டணத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் தனது மகன் சேதுநாகராஜனை கல்லூரிப் பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கடையத்துக்கு அழைத்துச் சென்றாா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சேதுநாகராஜனை இறக்கிவிட்டு அவா் வாகனத்தைத் திருப்பினாா். அப்போது, மன்னாா்கோவிலிலிருந்து செங்கல் ஏற்றிவந்த லாரி அவா் மீது திடீரென மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
சடலத்தை கடையம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், லாரி ஓட்டுநரான கூனியூரைச் சோ்ந்த அழகையா மகன் லட்சுமணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தட்டாா்மடம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

