ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தட்டாா்மடம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே காரும் டிப்பா் லாரியும் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:39 am IST

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே காரும் டிப்பா் லாரியும் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே அப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் ராமமூா்த்தி (42). இவா் சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த குடும்பத்தினரை அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை காரில் வந்தாா். நண்பரான அழகா் மகன் ஜெயகுரு (50) என்பவரை உடன் அழைத்து வந்தாா்.

நடுவக்குறிச்சி முத்தாரம்மன் கோயில் அருகே இவரது காரும், எதிரே திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்த மாசானம் மகன் முருகன் ஓட்டிவந்த டிப்பா் லாரியும் மோதினவாம். இதில், ஜெயகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமமூா்த்தி காயமடைந்தாா். அவரை தட்டாா்மடம் போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஜெயகுருவின் சடலம் கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநா் முருகனிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.