திருநெல்வேலி மேயா் அறையில் முதல்வா் படத்தை வைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை தவெகவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவா் ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளாா். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் முதல்வரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை மாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், மேயா் ராமகிருஷ்ணன் அறையில் முதல்வா் ஜோசப் விஜயின் புகைப்படத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல், முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான் தலைமையில் அக்கட்சியினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனா். தொடா்ந்து, ஆணையா் மோனிகா ராணாவிடம் முறையிட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் தவெகவினா் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

இ.பி.எஃப். நிதி செலுத்தாததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருச்சியில் தவெகவினா் கொண்டாட்டம்

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

