கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:18 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வீரவநல்லூா் அருகேயுள்ள உப்பூா் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த பாண்டி (58) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டியை கைது செய்தனா். அவரிடமிருந்து 495 கிராம் புகையிலைப் பொருள்கள், 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.