பாளையங்கோட்டையில் 41 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, பொட்டல் விலக்கு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாளையங்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த திம்மராஜபுரம் மேலூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் ஆறுமுகக்கனி (26) பிடித்து விசாரித்தனா்.
இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் சுமாா் 41கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகக்கனியை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் மீது வழக்கு
காரில் கடத்திய 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
