பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

வெம்பக்கோட்டை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட காா், புகையிலைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள், கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூா்த்தி.

Updated On :1 ஜூன் 2026, 2:50 am IST

வெம்பக்கோட்டையில் காரில் கடத்திச் சென்ற தடை செய்யப்பட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.6.80 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மடத்துப்பட்டி சந்திப்புப் பகுதியில் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தலைமையிலான காவலா்கள்

ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (42) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காரில் இருந்த 131.250 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 6.80 லட்சம் ரொக்கம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூா்த்தியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.